MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே நேரத்தில் ராஜவின் இரண்டு மனைவிகளையும் மடக்கி க.காதல்! இறுதியில் என்ன நடந்ததுனு நீங்களே பாருங்களே!

ஒரே நேரத்தில் ராஜவின் இரண்டு மனைவிகளையும் மடக்கி க.காதல்! இறுதியில் என்ன நடந்ததுனு நீங்களே பாருங்களே!

மயிலாடுதுறை அருகே, ராஜாவின் இரண்டு மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த லட்சுமணன் என்ற இளைஞர், கணவரால் மிரட்டப்பட்டார். பின்னர், தலைமறைவான அவரை கடத்தி வந்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Sep 24 2025, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : our own

காதல் திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேல குத்தவக்கரையை சேர்ந்தவர் லட்சுமணன்(35). இவருடைய மனைவி அஞ்சலி(28). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதேபோல் கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராமச்சந்திரன் லட்சுமணனின் தந்தையின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா, சத்யா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். தந்தையின் வீட்டிற்கு அருகே ராஜா வசித்து வந்ததால் லட்சுமணன் அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ராஜாவின் உறவினர் லட்சுமணன் என்பதால் அவரது இரண்டு மனைவிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் ராஜாவின் இரண்டு மனைவிகளுடன் லட்சுமணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

24
இரண்டு பேருடன் கள்ளக்காதல்
Image Credit : Asianet News

இரண்டு பேருடன் கள்ளக்காதல்

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ராஜாவுக்கு தெரியவந்தது. முதலில் அதிர்ச்சி அடைந்த கணவர் பின்னர் லட்சுமணனிடம் தனது மனைவிகளுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை வெளியே சொல்லாமல் இருக்க அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்படி பணம் தராவிட்டால் கொலை செய்து விடவதாகவும் கூறியுள்ளனர். இதனால் பயந்து போன லட்சுமணன் சென்னையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனை பல மாதங்களாக தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

Related Articles

Related image1
அண்ணியை மடக்கிய கணவர்! விஷயம் தெரிந்த காதல் மனைவி அம்மு! வீடே களேபரம்! திருப்பத்தூரில் நடந்த அதிர்ச்சி!
Related image2
அதுவும் செல்போன் கடையில் இப்படியா? காதலனுடன் வீடியோ காலில் பேசியபடியே கல்லூரி மாணவி செய்த சம்பவம்!
34
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்நிலையில் கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் லட்சுமணனின் உடல் கிடந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

44
அதிர்ச்சி தகவல்
Image Credit : our own

அதிர்ச்சி தகவல்

அதாவது ராஜா மற்றும் அவரது நண்பர் வல்லம்படுகையை சேர்ந்த ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் லட்சுமணன் சென்னை ஆவடியில் இருப்பதை தெரிந்து அங்கு சென்றனர். இங்கிருந்து லட்சுமணனை கொள்ளிடத்திற்கு கடத்தி வந்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை அருகில் உள்ள தெற்குராஜன் வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர். இதையடுத்து ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு
காவல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved