MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகாளய அமாவாசை, பிரம்மோத்ஸவம் சிறப்பு பேருந்துகள்! எங்கிருந்து இயக்கம்! இதோ முழு தகவல்

மகாளய அமாவாசை, பிரம்மோத்ஸவம் சிறப்பு பேருந்துகள்! எங்கிருந்து இயக்கம்! இதோ முழு தகவல்

மகாளய அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு அக்டோபர் 1 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். திருப்பதி பிரம்மோத்ஸவத்திற்கும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Sep 26 2024, 07:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறநிலையத்துறையின் கீழ் கோயில்களில் குடமுழக்கு நடத்துவது, கோயில் நிலங்களை மீட்பது, அன்னதானம் திட்டம் செயல்படுத்துவது என அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. அந்த வகையில் ஆன்மிகத்தில் அதிகளவு நாட்டம் உள்ளவர்களுக்காக ஆன்மிக சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் முதல் காசிக்கு மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருமாள் கோயில் சுற்றுலா, அம்மன் கோயில் சுற்றுலா என பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாளய அமாவாசை மற்றும் பிரம்மோத்ஸவத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

24

மகாளய அமாவாசை சிறப்பு பேருந்து

அந்த அறிவிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி  (புதன்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற 02/10/2024 அன்று மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

8வது படித்திருந்தாலே போதும்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை- உடனடியாக விண்ணப்பிக்க அழைப்பு

34

எந்த, எந்த இடத்தில் இருந்து சிறப்பு பேருந்து

தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனடிப்படையில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி  செவ்வாய்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
 

44

திருப்பதி திருமலையில் பிரம்மோத்ஸவம்

இதே போல திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில்,  திருப்பதி திருமலையில் இந்த வருடம் 2024-ல்  "பிரம்மோத்ஸவம்" திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். சென்னை. திருச்சி, தஞ்சாவூர், சேலம். கோயம்புத்தூர். மதுரை. காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பதிக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பக்தர்கள்  www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved