MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதுவும் ஓடும் பஸ்சிலேவா இப்படி! க.காதல் ஜோடி செய்த காரியம்! நேரில் பார்த்த பயணிகள்!

அதுவும் ஓடும் பஸ்சிலேவா இப்படி! க.காதல் ஜோடி செய்த காரியம்! நேரில் பார்த்த பயணிகள்!

Erode Illegal Love Couple: கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் செய்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

2 Min read
vinoth kumar
Published : Oct 06 2025, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கள்ளக்காதல்
Image Credit : Asianet News

கள்ளக்காதல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (35). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமிதா (40). கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு, கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமாருக்கும், சுமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

25
கண்டித்த மனைவி
Image Credit : Google

கண்டித்த மனைவி

இந்த விவகாரம் நாளடைவில் ராஜ்குமாரின் மனைவி ரேவதிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டுள்ளது. பின்னர் மனைவியை சமாதானம் செய்ய சுமிதாவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என ராஜ்குமார் சத்தியம் செய்துள்ளார். இதனையடுத்து ராஜ்குமார், கடந்த 29ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.

Related Articles

Related image1
மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Related image2
இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? நக்கீரன் கோபாலை.. செம கேள்வி கேட்ட சவுக்கு சங்கர்!
35
ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி
Image Credit : our own

ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி

பின்னர், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 1ம் தேதி ரேவதிக்கு போன் செய்த ராஜ்குமார் சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே உணவுக்காக நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் மயங்கினர். பின்னர் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

45
போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில் கோபி அருகே, காசிபாளையத்தைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி ராஜ்குமார், சுமிதா என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமிதாவும், ராஜ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

55
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Image Credit : our own

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கள்ளக்காதல் ஜோடி இருவரும், கோவையிலிருந்து சேலத்திற்கு பேருந்து ஏறி வந்ததாகவும், அதற்கு முன்பாகவே மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு பேருந்தில் ஏறி, பயணித்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து இருவரது வீட்டுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved