- Home
- Tamil Nadu News
- ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 01 (புதன்கிழமை) அன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குற்பட்டு ஏப்ரல் 01 அன்று. தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு தேர்வுகளுக் இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
மேற்குறிப்பிட்ட உள்ளூர் விடுமுறை நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி எவ்வித தொய்வின்றி வழக்கம் போல் நடைபெறும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
மேலும் உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1882)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 11ம் தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

