MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்! பாலியல் குற்றங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்! பாலியல் குற்றங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். 

2 Min read
vinoth kumar
Published : Mar 02 2025, 03:11 PM IST| Updated : Mar 02 2025, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை. நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால். இவனுகளை வேற மாதிரி பண்ணிவிடுவோம் என அன்புமணி கொந்தளித்துள்ளார். 

26
Crime Against Women

Crime Against Women

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குறிப்பாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிவி மற்றும் செய்திதாளை திருப்பினாலே பாலியல் குற்றம் தொடர்பாக செய்தியே அதிகளவில் காணப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

36
Anbumani Ramadoss

Anbumani Ramadoss

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் பா.விஜயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

46
Rape

Rape

அதன் பிறகு அங்கு கட்சி கொடி ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றுகையில்: தமிழ்நாட்டில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது. பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. தினமும் செய்தித்தாள்களில் பார்த்து கொண்டிருக்கிறோம். 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது. அந்த மிருகத்தை நாம் என்ன செய்யலாம்? பொதுமக்கள் சொல்வதை போல கொன்றுவிட வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வருகிறது.

56
Gang Rape

Gang Rape

8 பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். 7 பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை கற்பழிக்கின்றனர். இது நான் நினைத்தேன் பீகார், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என நினைக்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் தான் இப்படி நடக்கிறது. இதை எல்லாம் நடக்க விடனுமா? நடக்க விட முடியுமா? இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை. 

66
CM Stalin

CM Stalin

நான் மட்டும் ஆட்சியில் இருந்தேன் என்றால். இவனுகளை வேற மாதிரி பண்ணிவிடுவோம். வெட்டி விடுவோம். அதற்குப் பின்னர் இப்படி எவனாவது செய்வானா? அய்யய்யோ இந்த ஆட்சியில் வெட்டி விடுவாங்க என்ற பயம் இருக்கும். ஆனால் இப்ப பயமே இல்லை. இந்த சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறது தெரியுமா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் என அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved