MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்ன லவ் பண்ணிட்டு கழட்டி விட பாக்குறியா! கதறிய வினிதா! விடாத காதலன்! நடந்தது என்ன?

என்ன லவ் பண்ணிட்டு கழட்டி விட பாக்குறியா! கதறிய வினிதா! விடாத காதலன்! நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காதலை முறித்துக் கொண்டதால், பி.பார்ம் மாணவி வினிதா மீது அவரது முன்னாள் காதலர் ரஞ்சித் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min read
vinoth kumar
Published : Nov 07 2025, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் விவகாரம்
Image Credit : Google

காதல் விவகாரம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் வினிதா (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவாக வேலை செய்து வந்த ரஞ்சித் (25) என்பவருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது

24
காதலியை கொலை செய்ய திட்டம்
Image Credit : Asianet News

காதலியை கொலை செய்ய திட்டம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தது மட்டுமல்லாமல் வினிதா காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ரஞ்சித் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நேற்று வினிதாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குளக்காரன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

Related Articles

Related image1
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓயாமல் கனமழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Related image2
சுவர் ஏறிக்குதித்து! கல்லூரி மோட்டார் அறையில்! கதவை தட்டி கதறிய மாணவி! அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்!
34
அரசு மருத்துவமனை
Image Credit : Asianet News

அரசு மருத்துவமனை

அதன்படி நேற்று இரவு 11.30 மணியளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்த ரஞ்சித் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றியுள்ளார். இதில் வினிதாவின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் வினிதாவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

44
 பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார்
Image Credit : Asianet News

பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார்

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வினிதாவின் பெற்றோர்கள் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved