- Home
- Tamil Nadu News
- என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!
என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!
Vasool Raja Murder: காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 கல்லூரிகள் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Kanchipuram Vasool Raja
காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ். மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா(எ) வசூல் ராஜா(38). காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 28 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்தது. பிரபல தாதா ஸ்ரீதர் நண்பரான தியாகு என்பவருக்கு ராஜா வலது கரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
BJP Vasool Raja
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை ஏலம் எடுப்பதில் தியாகுவுக்கும் ராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தியாகுவிடம் இருந்து பிரிந்து எதிர் குழுவான நிவாஸ்கான் என்ற ரவுடியுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தனியாக காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த ராஜா ஒரு கட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரையும் மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரது பெயர் வசூல் ராஜா என அழைக்கப்பட்டது. இவர் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விளையாட்டு அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.
Vasool Raja Murder
இதனிடையே காதலி அட்வைஸ் செய்ததை அடுத்து சிறிது காலமாக எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் திருக்காளிமேடு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை அருகே தனது நண்பருடன் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் முதலில் ரவுடி வசூல் ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்து போன அவரை அரிவாளால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை! யார் இந்த வசூல்ராஜா?
College Student Arrest
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்தவர்கள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி ஓடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து வசூல்ராஜா கொலை சம்பவம் தொடர்பாக திலீப், சிவா, சுரேஷ் சூர்யா, பரத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டுகளை கையாள்வதில் திறமையான நபர் என கூறப்படும் நிலையில் அவரது பாணியிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இதுவரை கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.