MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 15 நாட்களில் ரூ.12.50 கோடி நஷ்டம்- ஜாய் கிரிசில்டா புகாரால் சேதாரம்.. கதறும் மாதம்பட்டி ரங்கராஜ்

15 நாட்களில் ரூ.12.50 கோடி நஷ்டம்- ஜாய் கிரிசில்டா புகாரால் சேதாரம்.. கதறும் மாதம்பட்டி ரங்கராஜ்

Joy Grisilda  : நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரைத் தொடர்ந்து, ரங்கராஜின் நிறுவனம் 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Sep 17 2025, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார்
Image Credit : x/Joy Crizildaa

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார்

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றியதாகவும், தன்னை தாக்கியதாகவும், தன்னுடன் வாழ மறுத்ததாகவும் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் தனது சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களையும், 6-7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். 

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் 'மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி' சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது.

24
அவதுறு கருத்து 12 கோடி நஷ்டம்
Image Credit : Asianet News

அவதுறு கருத்து 12 கோடி நஷ்டம்

மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார், முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் சார்பில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை ஜாய் கிரிசில்டா தொடர்புபடுத்தியதால், 15 நாட்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

Related Articles

Related image1
மருத்துவமனையில் சிகிச்சை.. ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாரா சம்பவம்
Related image2
Meena 2nd Marriage: 49 வயதில் மீனாவுக்கு 2-ஆவது திருமணமா? அவரே பகிர்ந்த தகவல்!
34
 ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்து
Image Credit : Asianet News

ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்து

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல் ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு ஜாய் கிரிசில்டா முன்வர வேண்டுமெனவும் அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாய் கிரிசில்டா தரப்பு வழக்கறிஞர்,மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் செல்ல விரும்பவில்லை எனவும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் அடையாளம் தெரியாது எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிபதி முன்பு வாதிடப்பட்டது.

44
ஆதாராங்களை ஒப்படைக்க நீதிபதி உத்தரவு
Image Credit : Asianet News

ஆதாராங்களை ஒப்படைக்க நீதிபதி உத்தரவு

இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறும் நிறுவனம், மாதம்பட்டி ரங்கராஜை பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே, அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்குடன் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கும் சேர்த்து செப்டம்பர் 24 ம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, 12 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
சினிமா
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved