MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இதுதான் உங்களது சாதி ஒழிப்பு நடவடிக்கையா? போலீஸ் கண் முன்னே மணிகண்டன் படுகொலை! கொதிக்கும் சீமான்!

இதுதான் உங்களது சாதி ஒழிப்பு நடவடிக்கையா? போலீஸ் கண் முன்னே மணிகண்டன் படுகொலை! கொதிக்கும் சீமான்!

பெரம்பலூரில் காவல்துறை முன்னிலையில் மணிகண்டன் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Jan 20 2025, 03:03 PM IST| Updated : Jan 20 2025, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Manikandan Murder

Manikandan Murder

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மணிகண்டன்(32). இவர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். அதே கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன்(30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் கை.களத்தூர் காவல்நிலைய தலைமைக் காவலர் ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தைக்காக மணிகண்டனை, அருணின் வயலுக்கு  அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தேவேந்திரன் அரிவாளால் மணிகண்டனை வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காவல்துறை முன்னிலையில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது தான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

26
Seeman

Seeman

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பி மணிகண்டன் சாதிவெறியர்களால் காவல்துறையின் முன்னிலையிலேயே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பேரதிர்ச்சி தருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக அமைதியைக் காக்க வேண்டிய காவல்துறையினரே சாதியவாதிகளுக்குத் துணைபோயிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

36
DMK Government

DMK Government

தம்பி மணிகண்டனின் படுகொலை பெரம்பலூர் மாவட்டம் முழுமைக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொலையாளிகளை இன்னும் கைது செய்யாதிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் ஆதித்தொல் குடிமக்கள் மக்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும், படுகொலைகளும் அதிகரித்திருக்கின்றன. வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீர்த்தொட்டியில் கலந்த வன்கொடுமையில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் ஆதிக்குடிகள் நுழைய முடியாத இழிநிலை உள்ளது. 

46
MK Stalin

MK Stalin

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக சாதிய ஆணவக்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. தற்போது காவல்துறையின் துணையோடு அவர்களின் முன்னிலையிலேயே ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் படுகொலை செய்யப்பட்டிருப்பது சாதியக் கோரத்தின் உச்சமாகும். காவல்துறை அமைச்சகத்தைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார்? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? ஆதிக்குடி மக்கள் மீதான கோரத்தாக்குதல்களை வேடிக்கைப் பார்ப்பதுதான் பெரியார் மண்ணா? 

56
Seeman News

Seeman News

சமூக நீதியெனப் பேசாத ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என நாளும் மேடைகளில் வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவதற்கு ஏன் தயங்குகிறது? இதுதான் உங்களது சாதி ஒழிப்பு நடவடிக்கையா? அடையாள அரசியல் செய்து, அடித்தட்டு உழைக்கும் மக்களை ஏமாற்ற வெட்கமாக இல்லையா? எத்தனைக்காலத்துக்கு ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்? பெரியார் எனும் பிம்பத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நீங்கள் போடும் சாதிய ஒழிப்பு நாடகமும், உங்களது முற்போக்கு முகமூடியும் கிழிந்து தொங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

66
Naam Tamilar Katchi

Naam Tamilar Katchi

ஆகவே, தம்பி மணிகண்டனைப் படுகொலை செய்த கொலையாளிகளும், அக்கொலைக்குத் துணையாக இருந்த காவல்துறையினரும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், தம்பி மணிகண்டனின் குடும்பத்தாருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved