MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரயில் டிக்கெட் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்

ரயில் டிக்கெட் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்

ஜூலை 1 முதல் 500 கி.மீட்டருக்கு மேல் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் சிறிதளவு உயரும். குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் புறநகர் வழித்தடங்களில் கட்டண உயர்வு இருக்காது.

1 Min read
SG Balan
Published : Jun 30 2025, 11:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : stockPhoto

இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 500 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
Image Credit : social media

குறுகிய தூரப் பயணங்கள் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் கட்டணம் உயரப் போவதில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டாம் வகுப்பில் 500 கி.மீட்டர் வரையிலான தொலைவுக்குப் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. சாதாரண வகுப்பில் 500 கி.மீட்டர் வரை பயணிப்போருக்கும் ரயில் டிக்கெட் உயர்வு இல்லை.

Related Articles

Related image1
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு குட் நியூஸ்! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Related image2
சென்னை - மைசூரு அதிவேக ரயில் திட்டம்: விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு
34
Image Credit : freepik

இருப்பினும், 500 கி.மீட்டருக்கும் மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். ஏசி அல்லாத ரயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, 500 கி.மீட்டருக்கும் மேலான பயணத்தில், ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும். உதாரணமாக, 1,000 கி.மீட்டர் தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை விட ரூ.10 அதிகரிக்கும்.

44
Image Credit : Asianet News

இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே மாற்றம் ஏற்படுவதால் பயணிகளைப் பெரிய அளவில் பாதிக்காது என்று ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
ரயில்
பயணம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசன்ஸ் கட்டாயம்..! தமிழக அரசு அதிரடிஉத்தரவு..!
Recommended image2
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
Recommended image3
Now Playing
எஸ். ஐ .ஆர். பணியில் தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஓட்டுரிமை இழப்பார்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
Related Stories
Recommended image1
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு குட் நியூஸ்! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Recommended image2
சென்னை - மைசூரு அதிவேக ரயில் திட்டம்: விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved