MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! நாளை டாஸ்டாக் கடைகளுக்கு மட்டுமல்ல பார்களுக்கும் விடுமுறை!

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! நாளை டாஸ்டாக் கடைகளுக்கு மட்டுமல்ல பார்களுக்கும் விடுமுறை!

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும். திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் போன்ற குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

1 Min read
vinoth kumar
Published : Sep 10 2025, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : google

தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினமும் டாஸ்மாக் வருமானம் 100 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்கள் வந்துவிட்டால் தமிழக அரசு கல்லா கட்டும்.

24
Image Credit : our own

இந்நிலையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட டாஸ்மாக் கடைகள் இயங்கும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களாகும். அதுமட்டுமல்லாமல் முக்கியமான தலைவர்களின் நினைவு தினம், கோவில் திருவிழா போன்ற தினங்களில் அந்தந்த மாவட்டங்களின் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Related image2
தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க! எகிறி அடிக்கும் இபிஎஸ்!
34
Image Credit : our own

இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மதுரை மாவட்டத்தில் நாளை அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (PL1/FL2/FL3/PL3A மற்றும் PL11) அனைத்தும் நாளை ஒரு நாள் மட்டும் அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மூடப்பட்டு இருக்கும்.

44
Image Credit : our own

மேற்படி நாளில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு அரசு
மதுரை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved