MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அட பாவிங்களா! காசுக்காக இப்படி கூடவா செய்வீங்க! டாக்டரை அலேக்கா தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

அட பாவிங்களா! காசுக்காக இப்படி கூடவா செய்வீங்க! டாக்டரை அலேக்கா தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய ஆட்டோவில் சென்றபோது நடுவழியில் விழித்தனர். போலீசார் விசாரணையில், புரோக்கர்கள் மூலம் ஆள் இல்லாத வீடுகளில் ஸ்கேன் சென்டர் நடத்துவது தெரியவந்தது. 

2 Min read
vinoth kumar
Published : Aug 21 2025, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
8 கர்ப்பிணி பெண்கள்
Image Credit : our own

8 கர்ப்பிணி பெண்கள்

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் இடம் தெரியாமல் நடுவழியில் திருதிருவென விழித்து நின்று இருந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் ஆட்டோவை மடக்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்ள வந்ததாக கூறியுள்ளனர்.

24
ஆள்ளில்லாத வீடுகள் வாடகை
Image Credit : Asianet News

ஆள்ளில்லாத வீடுகள் வாடகை

இதுகுறித்து கந்திலி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவிக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் இறங்கியதில் புரோக்கர்கள் மூலம் ஆள்ளில்லாத வீடுகளை குறிவைத்து அதனை ஒருநாள் வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு நாள் ஸ்கேன் சென்டர் நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ இயக்குனர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தகவல் அளித்து மருத்துவ குழுவினரும் தீவிர விசாரணை நடத்தியதில் ஏற்கனவே இது போல ஒரு கும்பல் சுற்றி வருகிறது அவர்களாக தான் இருக்கும் என்று தொலைபேசி எண்களை வைத்து அடையாளம் கண்டு புரோக்கர்கள் வலைவீசி தேடி வந்தனர்.

Related Articles

Related image1
மதுரையில் விஜய் மாநாடு! இன்று மழைக்கு வாய்ப்பா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Related image2
வரவன் போறவன் எல்லாம் அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்தினால் எப்படி? விஜய்க்கு எதிராக கொதித்த இபிஎஸ்!
34
பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது
Image Credit : Asianet News

பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் கைது

இந்நிலையில் மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவியான ஜோதி (37), சிவசக்தி (40), காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (47), சந்தூர் அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் (39), திருப்பத்தூர் முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமலா (40) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் வேலை செய்தது உறுதி படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மூன்று பெண்களை வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், இரண்டு ஆண்களை ஆண்கள் சிறையிலும் அடைத்தனர்.

44
சிறையில் அடைப்பு
Image Credit : our own

சிறையில் அடைப்பு

மேலும் தலைமறைவாக இருந்த ஸ்கேன் செய்ய வந்த மருத்துவரான திருப்பத்தூர் சாமநகர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் சுகுமார்(60) என்பவரை கந்திலி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் சிசுக்கொலை கொலை செய்வதற்காகவே இந்த ஸ்கேன் நடப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
டாக்டர்
காவல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved