MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! சென்னை, காஞ்சிபுரத்தில் நிலை என்ன.? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! சென்னை, காஞ்சிபுரத்தில் நிலை என்ன.? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை. மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1 Min read
Ajmal Khan
Published : Nov 13 2024, 06:43 AM IST| Updated : Nov 13 2024, 07:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rain school leave

Rain school leave

வடகிழக்கு பருவமழை தீவிரம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த  தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று சென்னைக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதினிடையே இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டது. 

24
rain school

rain school

ஆரஞ்ச் அலர்ட்

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

34
Heavy rain school leavev

Heavy rain school leavev

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கடலூர், அரியலூர் பெரம்பலூர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

44
School Leave

School Leave

சென்னை விடுமுறை இல்லை

அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவில் குறைவான அளவில் மழை பெய்துள்ளது. தற்போது வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.இருந்த போதும் தற்போது வரை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கனமழை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved