MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தின் 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை.. நாகை, காரைக்காலில் விடுமுறை

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை.. நாகை, காரைக்காலில் விடுமுறை

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகையில் பள்ளிகளுக்கும், காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 17 2025, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கனமழை எச்சரிக்கை
Image Credit : social media

கனமழை எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்டலில் சனிக்கழமை ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக் கிழமை அதே பகுதியில் நிலவியது. இது திங்கள் கிழமை காலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கள் கிழமை முதல் நவம்பர் 22ம் தேதி வரை கடலோர தமிழக மாவட்டங்களிலும், ஒருசில உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

24
ஆரஞ்ச் அலர்ட்
Image Credit : Asianet News

ஆரஞ்ச் அலர்ட்

கனமழையை குறிக்கும் வகையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓயாமல் கனமழை ஊத்தப்போகுதாம்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Related image2
சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்! பொங்கலுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?
34
மஞ்சள் எச்சரிக்கை
Image Credit : Asianet News

மஞ்சள் எச்சரிக்கை

மேலும் கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

44
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : Asianet News

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமக நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
மழை செய்திகள்
வானிலை அறிக்கை
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved