MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடிமகன்களே சரக்கு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க.. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

குடிமகன்களே சரக்கு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க.. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 28 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 120 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. வார விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வருமானம் கொட்டும். தமிழக அரசுக்கு வருமானத்தை அள்ளி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது.

25
ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை
Image Credit : our own

ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை

முழு மது விலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டாஸ்மாக் துறையை அரசு எடுத்து நடத்தி வந்தாலும் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் கூட விடுமுறை என்பதே இல்லை. அதாவது ஆண்டுக்கு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை.

Related Articles

Related image1
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி விவகாரம்.. வெளியான பரபரப்பு அறிக்கை!
Related image2
கல்லூரி மாணவி திடீர் தற்கொ*லை! அடுத்தடுத்து வெளியகும் அதிர்ச்சி தகவல்! கல்லூரி முதல்வரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
35
பிப்ரவரி 1ம் தேதி விடுமுறை
Image Credit : our own

பிப்ரவரி 1ம் தேதி விடுமுறை

இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் குருபூஜை நாட்கள், கோயில், மசூதி, தேவாலய விழாக்களின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இந்நிலைளில் பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தினம் முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
டாஸ்மாக் கடைகள் மூடல்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள் மூடல்

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் விடுமுறை தினமாகும். அன்றைய நாளில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான கூடங்களுடன் இணைந்த மற்றும் மதுபான கூடங்கள் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

55
சரக்கு வாங்கி வைக்கும் குடிமகன்கள்
Image Credit : our own

சரக்கு வாங்கி வைக்கும் குடிமகன்கள்

மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபான கூடங்களின் உரிமைதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்கூட்டியே சரக்கு வாங்கி வைக்க குடிமகன்கள் திட்டமிட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
Recommended image2
Now Playing
பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
Recommended image3
மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
Related Stories
Recommended image1
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி விவகாரம்.. வெளியான பரபரப்பு அறிக்கை!
Recommended image2
கல்லூரி மாணவி திடீர் தற்கொ*லை! அடுத்தடுத்து வெளியகும் அதிர்ச்சி தகவல்! கல்லூரி முதல்வரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved