MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என் மருமகளை விட்டுடு! எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கடுப்பான மாமனார்! அப்புறம் என்ன நடந்தது நீங்களே பாருங்க!

என் மருமகளை விட்டுடு! எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கடுப்பான மாமனார்! அப்புறம் என்ன நடந்தது நீங்களே பாருங்க!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், மருமகளுடன் கள்ளக்காதல் வைத்திருந்த உறவினரை தட்டிக்கேட்ட மாமனார் விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உறவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 26 2025, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சந்திரா காசி துரைசாமிக்கும் இடையே பழக்கம்
Image Credit : our own

சந்திரா காசி துரைசாமிக்கும் இடையே பழக்கம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சேலூர்நாடு ஊராட்சி பள்ளக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கசாப்பு செல்வராஜ் (55). இவரது மகன் விஜயகுமார். விவசாயம் செய்து வருகிறார். செல்வராஜ் வீட்டிற்கு, அவரது பெரியப்பா மகன் காசி துரைசாமி (48) அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும், காசி துரைசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

24
வேதனையில் கணவர்
Image Credit : Getty

வேதனையில் கணவர்

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் விஜயகுமாருக்கு தெரியவந்ததை அடுத்து தந்தையிடம் சொல்லி மகன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் மகனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து காசி துரைசாமியை கண்டித்துள்ளார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

Related Articles

Related image1
2வது கல்யாணம் செய்தும் தீராத ஆசை! 3 வது க.காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
Related image2
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புது மாப்பிள்ளை செய்த வேலை! தப்பு பண்ணிட்டேனே கதறும் மனைவி! நடந்தது என்ன?
34
போதையில் தகராறு
Image Credit : Google

போதையில் தகராறு

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குழிக்காடு டிரான்ஸ்பார்மர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, போதையில் அந்த பக்கமாக வந்த காசி துரைசாமியை அழைத்து, மருமகளுடன் வைத்துள்ள கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

44
மாமனார் கொலை
Image Credit : Asianet News

மாமனார் கொலை

அப்போது, காசி துரைசாமி அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காசி துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியை பிரிந்து தனியாக பிரிந்து வசித்து வந்து காசி துரைசாமி, அண்ணன் என்ற முறையில் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு வந்த நிலையில் கள்ளக்காதலாக மாறி அது கொலையில் முடிந்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
பெண்கள்
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved