MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லாஸ்ட் சான்ஸ்.! மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க.!அரசு முக்கிய அறிவிப்பு

லாஸ்ட் சான்ஸ்.! மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க.!அரசு முக்கிய அறிவிப்பு

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. 15.03.2025 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.

2 Min read
Ajmal Khan
Published : Mar 12 2025, 02:17 PM IST| Updated : Mar 12 2025, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Educational scholarships : கல்வி தான் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் ஆயுதம் ஆகும். அந்த வகையில் மாணவர்கள் கல்வி பெற எந்த வித தடையும் இருக்கக்கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவித்திட்டங்கள், இலவ கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி உதவித்தொகையானது வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் தேதி ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
24
உயர் கல்வி உதவி தொகை

உயர் கல்வி உதவி தொகை

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) கல்வி உதவி தொகை கோரி விண்ணப்பங்கள்  https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை வரவேற்க்கப்பட்டது.
 

34
விண்ணப்பிக்க கால அவகாசம்

விண்ணப்பிக்க கால அவகாசம்

இந்த நிலையில் மாணவ /மாணவியர்களின் நலன் கருதியும். கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணாக்கர்களும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

44
நிபந்தனைகள்

நிபந்தனைகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved