திடீரென பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.! என்ன காரணம் தெரியுமா.?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தனது X பக்கத்தில் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.

திடீரென பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.! என்ன காரணம் தெரியுமா.?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம், ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை, ஈசிஆரில் பெண்களை விரட்டிய திமுக கொடி கட்டிய கார், பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்ளை கட்டுப்படுத்ததாக திமுக அரசுக்கு அதிமுக சார்பாக கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தனது பெயரை மாற்றி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது. யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை!
யார்_அந்த_SIRகள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அஇஅதிமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு. இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை! எனவே தான், #SaveOurDaughters என்று பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்! இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன். இதுவரை நாம் நடத்தி வந்த #SayNoToDrugs_SayNoToDMK என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும்! என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.