MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கினால் அவ்வளவுதான்.! துள்ளி குதிக்கும் குடிமகன்கள்- டாஸ்மாக் அதிரடி

இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கினால் அவ்வளவுதான்.! துள்ளி குதிக்கும் குடிமகன்கள்- டாஸ்மாக் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும், கள்ளச்சந்தை விற்பனையை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பு தொடர்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 18 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TASMAC

TASMAC

கோடிகளில் மது விற்பனை

மதுவிற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்கள் முதல் பெண்கள் வரை மதுக்குடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. நண்பர்களோடு வெளியே செல்வது முதல் அலுவலக மீட்டிங் வரை மதுபானம் கொண்டாட்டம் இல்லாமல் நடைபெறுவது இல்லை. இதன் காரணமாக மது விற்பனை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம்  நாளொன்றுக்கு 120 கோடியும், வருடத்திற்கு 45ஆயிரம் கோடி ரூபாயும் மது விற்பனை செய்யப்படுகிறது.
 

25
TASMAC SHOP

TASMAC SHOP

பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்

அந்த வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி உதவி திட்டங்களுக்கு நிதியை வாரி வழங்கும் பொக்கிஷமாக டாஸ்மாக் உள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவே ஒரு புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள்ளத்தனமாக கூடுதலாக வசூல் செய்யும் பணம் மட்டுமே ஒரு நாளைக்கு பல லட்சம்  ரூபாய் அளவிற்கு செல்கிறது.

35
tasmac

tasmac

மதுபாட்டில்களுக்கு பில்

இதனை கட்டுப்படுத்த கோரி பல முறை மதுபிரியர்கள் புகார் அளித்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டுகொள்வதாக தெரிவதில்லை. யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டால் மட்டுமே அந்த கடைகள் மீது நடவடிகைக எடுக்கப்படுகிறது. இந்தநிலையால் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் மதுபானக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கியூ ஆர் கோட் பதிப்பது, ஸ்கேனர் இயந்திரம் வழங்குது என டிஜிட்டம் மயமாக்க ரெயில் டெல் நிறுவனத்திற்கு 294 கோடி ரூபாய்க்கு ஆர்டர் வழங்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுப்பு தொடங்கியுள்ளது.

45
TASMAC DIGITAL

TASMAC DIGITAL

டிசம்பரில் தமிழகம் முழுவதும் அமல்

அதன் படி சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களுக்கு பில் வழங்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 220 கடைகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதியில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தின் காரணமாக  காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய முடியும். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதும் தடுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

55
tasmac SHOP

tasmac SHOP


டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

எனவே இந்த புதிய முறையால் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் தனிப்பட்ட முறையில் பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாயை ஊழியர்கள் கேட்டு வருவது தெரியவந்தது.  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில்  மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடையில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் 2 பேர், 6 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டாஸ்மாக்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved