MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு..! இருமல் மருந்து ரங்கநாதன் இடத்திலும் சோதனை!

தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு..! இருமல் மருந்து ரங்கநாதன் இடத்திலும் சோதனை!

ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்தால் 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், அதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் அதிகாரிகள் வீடுகளில் சோதனை.

1 Min read
vinoth kumar
Published : Oct 13 2025, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம்
Image Credit : X

ஸ்ரீசன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்ரீசன் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து 'கோட்ரிப்' என்ற குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய இருமல் மருந்து தயார் செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்திலும் இந்த மருந்து விநியோகம் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

25
 22 குழந்தைகள் பலி
Image Credit : our own

22 குழந்தைகள் பலி

இந்நிலையில் கோடல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளின் மரணத்திற்கு அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்து தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் மீது கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

Related Articles

Related image1
வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
Related image2
தமிழக அரசை அலறவிட்ட தவெக வழக்கறிஞர்..! யார் இந்த கோபால் சுப்பிரமணியம்?
35
உரிமையாளர் ரங்கநாதன் கைது
Image Credit : Asianet News

உரிமையாளர் ரங்கநாதன் கைது

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து ரங்கநாதனை சென்னை காவல் துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து செய்தனர். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது

45
 அமலாக்கத்துறை சோதனை
Image Credit : Asianet News

அமலாக்கத்துறை சோதனை

இந்நிலையில், சென்னையில் ஸ்ரேசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

55
அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை
Image Credit : enforcementdirectorate.gov.in

அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை

அதேபோல் மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் தீபா ஜோசப், இணை இயக்குநர் கார்த்திகேயன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள தீபா ஜோசப் மற்றும் அண்ணாநகரில் உள்ள கார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved