MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எதிர்பாரா சூப்பரான திட்டத்தை வெளியிட்ட அரசு.! தாகம் தீர்க்க குடிநீர் ஏடிஎம்- எங்கெல்லாம் தெரியுமா.?

எதிர்பாரா சூப்பரான திட்டத்தை வெளியிட்ட அரசு.! தாகம் தீர்க்க குடிநீர் ஏடிஎம்- எங்கெல்லாம் தெரியுமா.?

வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை அமைத்து வருகிறது. 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : May 19 2025, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கொளுத்தும் வெயில் தமிழக அரசின் சூப்பர் திட்டம்
Image Credit : our own

கொளுத்தும் வெயில்- தமிழக அரசின் சூப்பர் திட்டம்

வெயிலின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் செல்லும் போது தண்ணீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது. குறைந்தது 20 ரூபாய் கொடுத்தே கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலை உள்ளது.  எனவே தண்ணீரை அதிகளவு பணம் கொடுத்து வாங்க மக்கள் தயங்கி வரும் நிலையில்,

 தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் படி, சென்னையின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது.

25
சென்னையில் 50 இடங்களில் வாட்டர் ஏடிஎம்
Image Credit : Asianet News

சென்னையில் 50 இடங்களில் வாட்டர் ஏடிஎம்

தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது. 

இந்த தீர்வு கானும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் வாட்டர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்து வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

Related Articles

Related image1
world Water Day 2025 : தண்ணீர் சிக்கனத்திற்கு பயனுள்ள '4' டிப்ஸ்!! பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்ல!
Related image2
Drink water before eat: சாப்பிடும் முன் கைகளில் தண்ணீர் ஊற்றி குடிப்பது ஏன் தெரியுமா? சித்தர்கள் சொன்ன ரகசியம்
35
24 மணி நேர தடையற்ற RO+UV கிருமி நீக்கம் செய்த குடிநீர்
Image Credit : our own

24 மணி நேர தடையற்ற RO+UV கிருமி நீக்கம் செய்த குடிநீர்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. 

24 மணி நேர தடையற்ற RO+UV கிருமி நீக்கம் குளிர்ந்த தூய நீரை உறுதி செய்கிறது. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான, நீடித்த மற்றும் எளிதான நிறுவலுக்கான கேபினட் மாதிரி வடிவமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

45
எந்த எந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்
Image Credit : Asianet News

எந்த எந்த இடங்களில் குடிநீர் ஏடிஎம்

முதல் கட்டமாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 40 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதம் 10 இடங்களில் விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
 150 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் வரை
Image Credit : Getty

150 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் வரை

இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 250 குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
நீர் சேமிப்பு குறிப்புகள்
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved