MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஏசி பஸ்ஸில் ஒரு நாள் ஏழுமலையான் தரிசனம்; பேக்கேஜ் கட்டணம் இவ்வளவு தானா.?

ஏசி பஸ்ஸில் ஒரு நாள் ஏழுமலையான் தரிசனம்; பேக்கேஜ் கட்டணம் இவ்வளவு தானா.?

பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக, ஆன்மிக பக்தர்களுக்காக திருச்செந்தூர், பழனி போன்ற கோயில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Oct 06 2024, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வேலைக்கு ஓய்வு- குடும்பத்தோடு சுற்றுலா

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடின வேலைகளுக்கு மத்தியில் எப்போது ஓய்வு கிடைக்கும் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என ஏராளமான மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இயற்கையான இடங்களாக தமிழகத்தில் ஊட்டி,கொடைக்கானல், குற்றாலம் என பல இடங்களுக்கு குடும்பத்தோடு செல்வார்கள். ஆனால் எங்கே செல்வது.? எந்த இடத்தை சுற்றிப்பார்ப்பது.? எங்கே தங்குவது என பல காரணத்தால் சுற்றுலாவை செல்ல தவிப்பார்கள். மேலும் பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கும். அவர்களுக்காகவே தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பல்வேறு டூர் பிளான் செயல்படுத்தி வருகிறது.

 குறிப்பாக இன்ப சுற்றுலாவாக ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என பல இடங்களுக்கு பட்ஜெட்டில் அழைத்து செல்லப்படுகிறது.  இந்த சுற்றுலா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  அந்த வகையில் ஆன்மிக பக்தர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோயில்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

25
murugan temple

murugan temple

ஆன்மிக சுற்றுலா

அறநிலையத்துறையோடு இணைந்து திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பதிக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. அதற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலாவாக அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலாவிற்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பானது உள்ளது.

இந்த ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவிற்கு செல்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். நேரிலோ அல்லது https://www.ttdconline.com/tirupathi_list.html இணையதள முகவரியிலையோ நாம் பயணம் செல்ல திட்டமிடும் தேதியை பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து சுற்றுலா பயண கட்டணத்தை செலுத்திய பிறகு திருப்பதி சுற்றுலா உறுதி செய்யப்படும்.

35

சென்னை டூ திருப்பதி டூர்

அதன் படி, காலை 5 மணிக்கு திருப்பதி செல்லும் பேருந்தானது சென்னை திருவல்லிக்கேணியுள்ள சுற்றுலா வளர்ச்சி கழகம் அலுவலகத்தில் இருந்து புறப்படுகிறது. ஏசி பேருந்தில் ஏறியதும் வாட்டர் பாட்டில், பிஸ்கெட் மற்றும் நாளிதழ் வழங்கப்படும். இதனையடுத்து அங்கிருந்து புறப்படும் பேருந்து  காலை 7.30 மணிக்கு திருத்தணியை வந்து அடைகிறது. அங்கு உயர்தர சைவ ஓட்டலில் காலை உணவாக  இட்லி, தோசை, பொங்கல் வடையோடு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனையடுத்து சூடான கோபியோடு அங்கிருந்து பயணம் மீண்டும் தொடங்கி காலை 9 மணிக்கு திருப்பதிக்கு சென்று சேர்கிறது. திருப்பதி சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் மற்றும் திருப்பதி தரிசன வழிமுறை தொடர்பாக கூறப்பட்ட பின்னர் திருமலா பேருந்திற்கு மாற்றப்படுவார்கள்.

45

2 மணி நேரத்தில் சிறப்பு தரிசனம்

அங்கிருந்து திருமலா காட்டேஜ்க்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு சிறிது நேர ஓய்விற்கு பிறகு உடை மாற்றுவது, மொட்டை அடிப்பது, மொபைல் போன் ஒப்படைப்பது போன்ற நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.இரண்டு மணி நேரத்தில் தரிசனம் முடிந்த பிறகு திருப்பதி மலையில் இருந்து கீழே இறங்கிய பிறகு டிடிடிசி சுற்றுலா பேருந்தில் பயணம் தொடங்கும்.

அட்வான்ஸாக என்ட்ரி கொடுக்கும் பருவமழை; வானிலை ஆய்வும் மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

55
Tirupati

Tirupati

கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

அடுத்த சில நிமிடங்களில் சூப்பரான ஆந்திரா மீல்ஸ் உணவானது வழங்கப்படும். பத்மாவதி தாயார் தரிசனத்திற்கு பிறகு மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருத்தனியில் இரவு உணவு முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்திற்கு இறக்கிவிடுப்பார்கள்.

இந்த ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 2300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் 2000 ஆயிரம் ரூபாய் திருப்பதிக்கு செல்ல ஏசி பேருந்து மற்றும் 3 வேளை உணவிற்காக வசூலிக்கப்படுகிறது. மேலும் 300 ரூபாய் திருப்பதி தரிசன கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஒரே நாளில் சென்று திரும்ப விரும்புவர்கள் இந்த சுற்றுலா பேக்கேஜை பயன்படுத்திக்கொள்ளலாம். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved