- Home
- Tamil Nadu News
- சொன்னதை செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! திமுக உறுப்பினருக்க ரூ. 10 லட்சம்!
சொன்னதை செய்து காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! திமுக உறுப்பினருக்க ரூ. 10 லட்சம்!
திமுக உறுப்பினர் சரிதா சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மதுரையில் கடந்த ஜூன் 1ம் தேதியன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவு என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த 02.6.2025 அன்று கழக உறுப்பினரான சரிதா அவர்கள், தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, பின் மண்டையில் பலத்த அடிபட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் சரிதா அவர்களின் கணவர் எஸ்.கண்ணன் அவர்களிடம் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.