MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆசிரியர்களுக்கு குஷியோ குஷி.! உடனே ஓய்வூதியம்- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு குஷியோ குஷி.! உடனே ஓய்வூதியம்- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் ஓய்வூதிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதிய நிலுவை தொடர்பான கோப்புகளை விரைந்து முடிக்க கூட்ட அமர்வுகள் நடத்தப்பட உள்ளன.

2 Min read
Ajmal Khan| AFP
Published : Jul 18 2025, 06:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசிரியர்களின் ஓய்வூதியம்
Image Credit : School education pro

ஆசிரியர்களின் ஓய்வூதியம்

இளம் தலைமுறையினரான மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள், ஓய்வுக்கு பிறகு கிடைக்க வேண்டிய பலன்களை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் ஆசிரியர்களின் ஓய்வு ஊதியம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 16.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF/DCRG/CPS அதிகமான அளவில் உரிய காரணங்கள் எதுமில்லாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலக் கணக்காயர் உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று தெரிவித்து நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
நிலுவையில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓய்வூதியம்
Image Credit : ANI

நிலுவையில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓய்வூதியம்

மாவட்டங்களில் ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2025 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகிற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்புநிதிக் கருத்துருக்களை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கும் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியக் கருத்துருக்களை அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கும் காலதாமதமின்றி 28.07.2025-க்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து 19.07.2025 சனிக்கிழமை அன்று ஓய்வூதிய நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்கும் வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கூட்ட அமர்வு (Joint Sitting) நடத்தப்பட உள்ளது.

Related Articles

Related image1
இலவச பாடங்கள் கற்க உதவும் டாப் 5 அரசு வெப்சைட்கள்!
Related image2
நெல்லை: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சொந்த ஊரிலே அரசு வேலை ! ₹35,100 சம்பளம்!
34
28ஆம் தேதிக்குள் அறிக்கையை கொடுங்கள்
Image Credit : GOOGLE

28ஆம் தேதிக்குள் அறிக்கையை கொடுங்கள்

மாவட்டக் கண்காணிப்பாளர்களாக செயல்படுகின்ற இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மதிப்புமிகு அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2025 வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகிற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்புநிதிக் கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு 

இணையதள வழியாக ஆய்வுகள் நடத்தியும் மாவட்டங்களுக்கு செல்கின்ற போது மாவட்ட அலுவலர்களை ஆய்வு செய்து ஒருவார காலத்திற்குள் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

44
மாவட்ட அலுவர்கள் நியமனம்
Image Credit : GOOGLE

மாவட்ட அலுவர்கள் நியமனம்

19.07.2025 சனிக்கிழமை அன்று ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படவுள்ள கூட்ட அமர்வு (Joint Sitting) சார்ந்து இணையதளம் (Google meet) வழியாக நடத்தப்பட உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்குமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 30 மாவட்டங்களுக்கு ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி செங்கல்பட்டு மாவட்டம்- இயக்குநர் கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பழனிச்சாமி-சென்னை, தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ்-திருவள்ளூர், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் சாந்தி-காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
பள்ளி மாணவர்
கல்வி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved