MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி ஆசிரியர்களே ரெடியா.! இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு.? தேதி குறித்த தமிழக அரசு

பள்ளி ஆசிரியர்களே ரெடியா.! இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு.? தேதி குறித்த தமிழக அரசு

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Dec 23 2024, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
school teacher

school teacher

மாணவர்களின் முன்னேற்றம்

கல்வி மட்டுமே எதிர்கால தலைமுறையினரை சிறப்பாகவும், வளர்ச்சியை நோக்கி செலுத்த முடியும். இதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் மாதா, பிதா குரு தெய்வம் என வரிசைப்படுத்துகிறார்கள். மாணவர்கள் சிறந்த முறையில் முன்னேறுவதற்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம். அதன் படி சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பரிசுகளும், நல்லாசிரியர்கள் விருதும் வழங்கி வருகிறது.

24
school teacher

school teacher

நல்லாசிரியர் விருது

மேலும் ஆசிரியர்களுக்கிடையே போட்டி நடத்தி சிறந்த முறையில் வெற்றி பெறும் ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுகிறது. கடந்த முறை 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறமையை அதிகரிக்கும் வகையில் பயிற்சிகள் அவ்வப்போது நடத்தி வருகிறது. அதன் படி எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

34

ஆசிரியர்களுக்கு பயிற்சி

அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் பருவத் தேர்வு ஜனவரி 6 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 
 

44
teacher

teacher

 எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது  ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. 
 1ஆம் வகுப்பு  முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு  ஜனவரி 21, 22-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்புக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளிலும் பயிற்சிகள் நடைபெறுகிறது.  எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved