MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பு வெளியானது - முதல்வர் உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பு வெளியானது - முதல்வர் உத்தரவு!!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றான ஈட்டிய விடுப்பு சரண் முறை நடப்ப ஆண்டே நடைமுறைக்கு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Apr 28 2025, 10:16 AM IST| Updated : Apr 28 2025, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
MK Stalin Government Employees announcement

MK Stalin Government Employees announcement

Mk Stalin: தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முன்னதாக கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெறுக்கடியை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
 

24
Tamil Nadu Chief minister M K Stalin (File Photo/@mkstalin)

Tamil Nadu Chief minister M K Stalin (File Photo/@mkstalin)

அரசு ஊழியர்களின் போராட்டம்

ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த பட்ஜெட் உரையின் போது 1 - 4 - 2026 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபயன் பெறலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார்.
 

34

முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்

ஆனால், சரண் முறையை நடப்பு நிதியாண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முதல்வர் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 

44

நடப்பு நிதியாண்டே அமல்

முதல்வரின் அறிவிப்புகளில் முக்கியமான ஒன்றான சரண் முறை நடப்பு நிதியாண்டே அமல் படுத்தப்படுகிறது. அதன்படி 15 நாட்கள் வரை அரசு ஊழியர்கள் வருகின்ற 1 - 10 - 2025 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபலனைப் பெறலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
அரசு ஊழியர்கள்
அரசு வேலை
விடுமுறை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved