MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கதறிய 8 வயது சிறுமி! பதறிய பாட்டி! தப்பு செய்யவே நினைக்காத அளவுக்கு கொடூரனுக்கு கோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு!

கதறிய 8 வயது சிறுமி! பதறிய பாட்டி! தப்பு செய்யவே நினைக்காத அளவுக்கு கொடூரனுக்கு கோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு!

Child Girl Rape Case: நாகையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Apr 18 2025, 09:40 AM IST| Updated : Apr 18 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Child girl Rape

Child girl Rape

சிறுமி பலாத்காரம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்தவர் மாதவன் வயது (32). கொத்தனார். இவரது வீட்டின் அருகே 8 வயது  சிறுமி தனது  பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். மாதவன் அந்த சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனது வீடு , மூங்கில் புதர்,  கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். 

24
Criminal arrested

Criminal arrested

குற்றவாளி போக்சோவில் கைது 

இந்நிலையில் சிறுமியை அவரது பாட்டி குளிப்பாட்டி கொண்டிருக்கும் பொழுது  சிறுநீர் கழிக்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.  இதுகுறித்து பாட்டி சிறுமியிடம் கேட்டபோது மாதவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை போக்சோவில் கைது செய்தனர். 

இதையும் படிங்க: பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவன்‌ படுகொலை! தலையை தனியே எடுத்துச் சென்றது ஏன்? பகீர் தகவல்!

34
POCSO Special Court

POCSO Special Court

போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்திகா நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 
அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மாதவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த  குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

44
District Collector

District Collector

ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இதனை ஏக காலத்தில் அனுபவிக்கும் படியும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாதவனை கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
நீதிமன்றம்
குற்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved