MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • படுத்த படிக்கையில் கணவர்! குடும்பத்தை காப்பாற்றி வந்த வரலட்சுமி உயிரிழப்பு! சொன்னபடி ரூ.20 லட்சம் நிவாரணம்!

படுத்த படிக்கையில் கணவர்! குடும்பத்தை காப்பாற்றி வந்த வரலட்சுமி உயிரிழப்பு! சொன்னபடி ரூ.20 லட்சம் நிவாரணம்!

சென்னை கண்ணகி நகரில் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

1 Min read
vinoth kumar
Published : Aug 23 2025, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி
Image Credit : Asianet News

தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி(30). இன்று வழக்கம் போல வேலைக்கு சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த போது வரலட்சுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

24
வரலட்சுமி உயிரிழப்பு
Image Credit : Asianet News

வரலட்சுமி உயிரிழப்பு

உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் 4 ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் , 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வரலட்சுமியின் சம்பளத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரது இழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயை இழந்த குழந்தைகள் நிர்கதியான நிலையில் அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் வரலட்சுமி உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

Related Articles

Related image1
அதிகாலையிலேயே சென்னையில் அதிர்ச்சி! தேங்கிய நீரில் காலை வைத்த தூய்மைப் பணியாளர் துடிதுடித்து பலி!
Related image2
மாநாடு நடந்த இடமே அலங்கோலம்! தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு அவ்வளவுதான்! விஜய்யை ஏடா கூடமாக விமர்சித்த H.ராஜா!
34
ரூ.20 லட்சம் நிதியுதவி
Image Credit : Asianet News

ரூ.20 லட்சம் நிதியுதவி

இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

44
அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல்
Image Credit : Asianet News

அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல்

அதன்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்துக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல் தெரிவித்த கையோடு அறிவித்தப்படி ரூ.20 லட்சம் நிவாரணத்தை வழங்கினார். மேலும் கணவருக்கு மாநகராட்சியின் பணி வழங்கப்படும் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
திமுக
சென்னை
விபத்து
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved