MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னையில் பெண்கள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

சென்னையில் பெண்கள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வழக்கு பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் பன்முக உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Ajmal Khan
Published : Nov 22 2024, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சென்னையில் வேலைவாய்ப்பு

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre). பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

26

விண்ணப்பிக்க அழைப்பு

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய மற்றும்  ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்  ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
 

36
job

job

வழக்கு பணியாளர் (Case worker) (காலிப்பணியிடம்1)

பணியிடம் : ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். இது ஒப்பந்த அடிப்படையிலான (Contract Based) பணி ஆகும்.மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும்.

46

பணியிடம் : ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.

பாதுகாப்பாளர் (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.இது ஒப்பந்த அடிப்படையிலான (Contract Based) பணி ஆகும்.மாத ஊதியமாக ரூ.12,000/- வழங்கப்படும்.
 

56
job

job

பணியிடம்: ஒருங்கிணைந்த சேவை மையம், தாம்பரம் சானடோரியம்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள் 2)

ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.இது ஒப்பந்த அடிப்படையிலான (Contract Based) பணி ஆகும்.மாத ஊதியமாக ரூ.10,000/- வழங்கப்படும்.
 

66

கடைசி நாள் அறிவிப்பு

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 06.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ
விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
Recommended image2
Tamil News Live today 22 November 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
Recommended image3
நான் விஜய்யை அப்படி சொல்வேனா! அவரு எங்க வீட்டு பிள்ளை! அப்படியே பல்டி அடித்த பிரேமலதா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved