ஓஹோ இது தான் உங்க 'அடங்க மறு, அத்துமீறு' கொள்கையா..? திருமாவை விளாசும் பாஜக
சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் மீது தாக்குதல் தனது தொண்டர்கள் தாக்கதல் நடத்தியதை தடுக்காத விசிக எம்.பி. திருமாவளவனுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் மீது மோதிய திருமாவின் கார்
சென்னை உயர்நீதிமன்றம் அருகே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவனின் கார் வழக்கறிஞர் ஒருவரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் திருமாவளவனிடம் விளக்கம் கேட்க முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமாவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.
தலைமைப்பண்பு உள்ளதா..?
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “உங்களிடம் தலைமைப் பண்பு உள்ளதா திருமாவளவன் அவர்களே?
இன்று சென்னை உயர்நீதி மன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதிய நிலையில், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் (வழக்கறிஞர்) மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள். சென்னையில் இது போன்ற சிறு சிறு விபத்துக்கள் தினந்தோறும் நடைபெறுவது சகஜம் என்றாலும், ஒரு கட்சி தலைவர் அமர்ந்துள்ள வாகனத்தில் வந்தவர்களும், அவரின் ஆதரவாளர்களும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட நபரை ஓட ஓட விரட்டுவது, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களை அரங்கேற்றியதை விட, இந்த நிகழ்வுகளை 'அடங்க மறு, அத்துமீறு' என்ற கொள்கை குன்றாக வாகனத்திலேயே அமர்ந்து கொண்டு, நடந்த தாக்குதலை கண்டிக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தொல். திருமாவளவன் அவர்களே, உங்களிடம் தலைமை பண்பு உள்ளதா? என்பதே என் கேள்வி!
@grok திருமாவளவன் பார்லிமென்ட்ல laa இப்படி தான் பொய்யா பேசுவாரா? @DrSharmila15#Thirumavalavan@VanniKural@sinthanaivck@WriterRavikumar@DrSharmila15@VckBalaji@BalaBharathiCPM@uvasuki@tncpim@kbcpim@IndiraniSudala1@Aarthipillai18@IInbadurai@CVShanmugamofl@SasiRekhaADMKpic.twitter.com/qrs4gRw8uH
— 🤷படிக்காதவன் 🤷 (@SofiyaBsc) October 7, 2025
முதல்வர் மௌனம் காப்பது நியாயமா..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.