MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஃபுல் மப்பில் வந்த கொடூரன்கள்! இளம் பெண்களை குண்டுக் கட்டாக தூக்கி சென்று அத்துமீறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

ஃபுல் மப்பில் வந்த கொடூரன்கள்! இளம் பெண்களை குண்டுக் கட்டாக தூக்கி சென்று அத்துமீறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரையில் இரண்டு இளம்பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் அவர்களை தூக்கிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். 

1 Min read
vinoth kumar
Published : Jul 31 2025, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் இரவு இரண்டு இளம் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் வந்த மூன்று இளைஞர்கள் இளம்பெண்களின் ஆண் நண்பர்களை அடித்து துரத்திவிட்டு, இரண்டு இளம் பெண்களையும் குண்டுக் கட்டாக தூக்கி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

24
Image Credit : Asianet News

சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் வீரபாண்டி காவல் நிலையம் அமைந்துள்ள நிலையில் மதுபோதைக் கும்பலிடம் இருந்து தப்பிய இளம் பெண் ஒருவர் அங்கிருந்து ஓடி சென்று வீரபாண்டி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை காப்பாற்றியதுடன் மது போதை கும்பலைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related Articles

Related image1
செம்பரம்பாக்கம் ஏரியில் அதிர்ச்சி! அரைகுறை ஆடையுடன்! அலறியடித்து ஓடிய இளைஞர்கள்!
Related image2
கொலையுண்டு கிடப்பது உன் காதலன்! எதற்கும் அஞ்சாதே! கவின்குமார் காதலிக்கு உடுமலை கௌசல்யா போட்ட பதிவு வைரல்!
34
Image Credit : our own

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர் மேற்கு வங்கத்தையும், மற்றொருவர் சென்னையையும் சேர்ந்தவர்கள் என்றும்,தேனியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், இந்த இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற வீரபாண்டி மேலத்தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (27),பாண்டி மகன் குணால் (28), உதயகுமார் மகன் ஹரிஹரன் (21)ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

44
Image Credit : Asianet News

வீரபாண்டி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் உள்ள கௌமாரியம்மன் கோவில் ஆற்றங்கரை பகுதியில் இரண்டு இளம் பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved