MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2வது திருமண நாளில் 3வது திருமணம்! அன்னபூரணி கல்யாண பண்ணப் போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா.?

2வது திருமண நாளில் 3வது திருமணம்! அன்னபூரணி கல்யாண பண்ணப் போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா.?

சமூக வலைதளங்களில் பிரபலமான சாமியார் அன்னபூரணி அரசு அம்மா, தனது திருமணத்தை அறிவித்துள்ளார். முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சையில் சிக்கிய இவர், தற்போது ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வருகிறார். ரோகித் என்பவரை நவம்பர் 28 அன்று திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 29 2024, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

யார் இந்த அன்னபூரணி.?

சமூக வலைதளங்களில் வைரல் சாமியார் தான் அன்னபூரணி அரசு அம்மா எனும் சாமியார், இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலையில் காட்சியளித்தபடி மக்களுக்கு அருள்வாக்கு சொல்லும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் குவிந்து கிடைக்கிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக பேமஷாக இருக்கும் அன்னபூரணி அம்மா, பழைய வரலாறு தான் அவரை பலரும் கிண்டலடிக்க காரணம்,

எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த சமூகவலைதளவாசிகளுக்கு வீடியோ ஒன்று கிடைத்தது. அது தான் கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவரோடு வாழ்ந்து வந்த விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில் அன்னபூரணி கலந்து கொண்டு பேசியிருந்தார்.

25

திடீரென சாமி அவதாரம்

இந்தநிலையில் தான் காலத்தின் மாற்றத்தால் புதிய அவதாரம் எடுத்துள்ளார் அன்னபூரணி, செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் தொடங்கியுள்ளார். அன்னபூரணி அரசு அம்மாவின் அவதார திருநாள் விழாவானது வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் ஆசி பெற்றனர். அப்போது தன்னை பார்க்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும், குடும்ப பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார்.
 

35
annapoorani

annapoorani

திடீர் திருமண அழைப்பு

இந்த சூழ்நிலையில் தான் அன்னபூர்ணி அம்மாவிற்கு திருமண நிகழ்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில்,  நவம்பர் 28 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம்.. அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும்  சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறியுற்றார். மேலும்  என்னுடைய ஆசிரம நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் ,
 

45

ரோகித்தை திருமணம் செய்யப்போகிறேன்

நானும் தனது முன்னாள் கணவர் அரசுவும்  திருமணம் செய்து கொண்ட  நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்  அன்றைய தினத்தில்  விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை என தெரிவித்துள்ளார்

55

வாழ்த்து வாங்க வாருங்கள்

கலும் மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருப்பதாகவும், இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை  சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன் என அன்னபூரணி அரசு தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved