MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாமக MLA அருளை கொல்ல முயற்சி.. போகும் இடமெல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கும் அன்புமணி தரப்பு

பாமக MLA அருளை கொல்ல முயற்சி.. போகும் இடமெல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கும் அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 04 2025, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொடூமாக மோதக் கொண்ட அன்புமணி, ராமதாஸ் தரப்பு
Image Credit : Google

கொடூமாக மோதக் கொண்ட அன்புமணி, ராமதாஸ் தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் தற்போது நிர்வாகிகள் இடையேயான மோதலாக மாறி உள்ளது. இரு தரப்பு இடையே கடந்த சில மாதங்களாக இணையதளம் வாயிலாக காரசாரமான கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான அருள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாமக நிர்வாகியின் இல்ல துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்கள் சுமார் 50 நபர்களுடன் காரில் பயணித்துள்ளார். துக்க வீட்டில் கலந்து கொண்டு திரும்பி வந்த அருளை அன்புமணி ஆதரவாளர்கள் வழி மறித்தனர்.

24
5 பேர் படுகாயம்
Image Credit : Google

5 பேர் படுகாயம்

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அன்புமணி ஆதரவாளர்கள், கட்டை, கம்பி உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் அருளுடன் வந்த நிர்வாகிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இவர்கள் பயணித்த வாகனங்களும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

Related Articles

Related image1
Now Playing
உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி ஐயா ராமதாஸிடம் மட்டுமே உள்ளது - எம்எல்ஏ அருள் பேட்டி
Related image2
கல்லூரி மாணவியை அலேக்கா தூக்கி சென்ற கொடூரன்கள்! புதரில் அலங்கோலமாக அலறல்! அன்புமணி அதிர்ச்சி தகவல்
34
அன்புமணி கூறியே தாக்குதல் நத்தப்பட்டது..
Image Credit : google

அன்புமணி கூறியே தாக்குதல் நத்தப்பட்டது..

தாக்குதல் தொடர்பாக அருள் கூறுகையில், “அன்புமணி கூறி தான் இவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தான் அன்புமணியின், டீசண்ட், டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ். இவர்களுக்கு தெரிந்தது இது மட்டும் தான். நான் என் காரில் இருந்து இறங்காததால் நான் உயிர் தப்பி உள்ளேன். காரில் இருந்து இறங்கியிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். காவல் துறையினர் நியாயமாக செயல்படுவார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

44
சேலத்தில் பரபரப்பான சூழல்
Image Credit : Google

சேலத்தில் பரபரப்பான சூழல்

சேலம் மாவட்டத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட நிலையில், மாநகரம் முழுதும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பு உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து சமரசம் பேசும் முயற்சியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
குற்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved