MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்..! நடுவானில் திக்.. திக்.. திக்..! என்ன நடந்தது?

பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்..! நடுவானில் திக்.. திக்.. திக்..! என்ன நடந்தது?

பறவை மோதியதால் பழுதடைந்த ஏர் இந்தியா விமானம் இலங்கையில் இருந்து சென்னை வந்து பத்திரமாக தரையிறங்கியது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Rayar r
Published : Oct 07 2025, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியது
Image Credit : X

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியது

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொறியாளர்கள் விமானத்தில் சிக்கியிருந்த பறவையின் உடலை வெளியே எடுத்தனர்.

24
கொழும்புக்கு செல்லும் பயணம் ரத்து
Image Credit : social media

கொழும்புக்கு செல்லும் பயணம் ரத்து

பறவை மோதியதால் விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால் அந்த விமானம் 143 பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் சென்னை வந்தது. சென்னை விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பரிசோதனை செய்தபோது விமானத்தின் பேன் பிளேடில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த விமானம் மீண்டும் கொழும்புக்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Related image1
விமானத்தில் கரப்பான் பூச்சிகள் அட்டகாசம்! நடுவானில் அலறிய பெண்கள்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
Related image2
ஏர் இந்தியாவுக்கு புது சிக்கல்! விபத்துக்குப் பின் அடிக்கடி லீவு போடும் விமானிகள்!
34
பயணிகள் அதிர்ச்சி
Image Credit : ANI

பயணிகள் அதிர்ச்சி

விமானத்தில் பறவை மோதியதும் அதன் காரணமாக அது பழுதடைந்ததும் பயணிகளுக்கு தெரியாது. தரையிறங்கிய பிறகு இந்த தகவலை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பறவை மோதி பேன் பிளேடு சேதம் அடைதிருந்த நிலையில், நல்ல வேளையாக விமானம் பறக்கும்போது எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. விமானம் சேதம் அடைந்திருந்த நிலையில், கொழும்பில் விமானத்துக்கு பாதிப்பில்லை என பொறியாளர்கள் எப்படி கூறினார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

44
ஏர் இந்தியா விமான விபத்தை மறக்க முடியுமா?
Image Credit : Getty

ஏர் இந்தியா விமான விபத்தை மறக்க முடியுமா?

சில மாதங்களுக்கு முன்பு அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். 

இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கிய இந்த விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏர் இந்தியா
வானூர்திப் பயணங்கள்
சென்னை விமான நிலையம்
இலங்கை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved