MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்சி
  • ரூ.1 லட்சம் மானியத்துடன் தமிழக அரசு நிதி உதவி; இளைஞர்களுக்கு திருச்சி ஆட்சியர் அழைப்பு

ரூ.1 லட்சம் மானியத்துடன் தமிழக அரசு நிதி உதவி; இளைஞர்களுக்கு திருச்சி ஆட்சியர் அழைப்பு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்படும் நிதி உதவியை பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Jul 29 2024, 11:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வேளாண்மை

வேளாண்மை

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி மாவட்ட வேளாண்முஸ்ரீதுறை மூலம் 2024 - 25ம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் மானியம் வேளாண் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

24
வேளாண்மை

வேளாண்மை

தற்போது திருச்சி மாவட்டத்திற்கு வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி அறிவுடைய வேளாண் தொடர்பான செயலிகளை பயன்படுத்தும் திறன் கொண்ட பட்டதாரிகள் 3 பேர் வேளாண் தொழில் முறைவோராக செயல்பட தமிழக அரசின் அரசாணை பெற்பட்டுள்ளது.

34
வேளாண்மை

வேளாண்மை

இதன் மூலம் பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். எனவே தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

44
வேளாண்மை

வேளாண்மை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் உத்தேசித்துள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு நகல் மற்றும் வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம தொடங்குபவர் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவான திட்ட அறிக்கையையும் ஆக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்” என்று ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விவசாயம்
திருச்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved