MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்சி
  • 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம்

6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம்

திருச்சியில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது.

1 Min read
Velmurugan s
Published : Mar 04 2023, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Trichy Cauvery Bridge

Trichy Cauvery Bridge

திருச்சி - ஸ்ரீரங்கத்தை (திருவரங்கம்) இணைக்கும் காவிரி ஆற்று பாலத்தில் நாள் தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதக அளவிலான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்லும் நிலையில் பாலத்தின் தார் சாலைகள் பெயர்ந்து கான்கிரீட் தளங்கள் வெளியில் தெரியும் அளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டன.

25
Trichy Cauvery Bridge

Trichy Cauvery Bridge

பாலத்தில் பழுது ஏற்பட்ட நிலையிலும், பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையோ, வாகனங்களின் வேகமோ குறைந்ததாக இல்லை. இதனால் பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்தது.
 

35
Trichy Cauvery Bridge

Trichy Cauvery Bridge

இதனைத் தொடர்ந்து பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக பகுதியாக மூடப்பட்டது. இதனால் சுமார் 6 மாத காலமாக இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

45
Trichy Cauvery Bridge

Trichy Cauvery Bridge

கனரக வாகனங்கள், பொதுபோக்குவரத்து வாகனங்கள் நான்கு வழிச்சாலையை சுற்றி மீண்டும் ஊருக்குள் வரவேண்டிய நிலை இருந்தது.
 

55
Cauvery Bridge

Cauvery Bridge

இந்நிலையில் ரூ.6.84 கோடி மதிப்பில் பாலத்தை சீரமைக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு காவிரி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் பேருந்து உட்பட கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருச்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved