MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கடலூர்
  • மது கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கடலூர் எஸ்.பி. எச்சரிக்கை

மது கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கடலூர் எஸ்.பி. எச்சரிக்கை

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Apr 02 2025, 10:08 AM IST| Updated : Apr 02 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Liquor Smuggling

Liquor Smuggling

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று நடைபெற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

25
Liquor from Puducherry

Liquor from Puducherry

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர். 

35
Cuddalore SP Warning

Cuddalore SP Warning

குற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய எஸ்.பி. ஜெயக்குமார், மதுபானம் கடத்துவோரும், விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் தெரிவித்தார். 

45
Cuddalore SP Jayakumar

Cuddalore SP Jayakumar

மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனங்களை முறையாக சோதனை செய்து, சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

55
TASMAC

TASMAC

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved