MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • தீபாவளி முடிந்து சென்னை போறீங்களா? கஸ்டமே வேண்டாம் - தெற்கு ரயில்வேயின் குஷியான செய்தி

தீபாவளி முடிந்து சென்னை போறீங்களா? கஸ்டமே வேண்டாம் - தெற்கு ரயில்வேயின் குஷியான செய்தி

தீபாவளி பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான பயணிகள் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிகாலையில் சிறப்பு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 01 2024, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
chennai electric train

chennai electric train

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகையைக் கொண்டாடும் வண்ணம் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகின்ற திங்கள் கிழமை அதிகாலையில் மீண்டும் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்ப வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பேருந்துகள் மூலமாக 5 - 6 லட்சம் மக்களும், ரயில் மூலம் சுமார் 4 லட்சம் பயணிகளும் சென்னை திரும்புவார்கள் என்று தெரிகிறது.

23
electric train

electric train

சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னைக்குள் செல்ல மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வசதியாக, வருகின்ற திங்கள் கிழமை அதிகாலை முதல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

33
electric train

electric train

அதன்படி காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற திங்கள் கிழமை அதிகாலை 4 மணி, 4.30, 5, 5.45, 6.20 என சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
தமிழ் செய்திகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved