- Home
- Tamil Nadu News
- சென்னை
- நீட் தேர்வு அச்சம்! சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை! நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
நீட் தேர்வு அச்சம்! சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை! நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
Chennai NEET Student Suicide: இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்த மாணவி, மே 5ம் தேதி நடக்கவிருந்த தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இந்த விபரீத முடிவு.

நீட் தேர்வு
மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலில் 12ம் வகுப்பு தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும். நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. நீட் தேர்வில் தோல்வி, அச்சத்தால் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி. 2021ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் கட் ஆப் மார்க் வரவில்லை. இதனையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி மே 5ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை
இந்நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அறையில் சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி சீருடை அளவெடுத்த ஆண் டெய்லர்! கட்டாயப்படுத்திய ஆசிரியை! மாணவி பரபரப்பு புகார்! நடந்தது என்ன?
போலீஸ் விசாரணை
தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.