- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai:சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
Power Shutdown in Chennai:சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்:
ஜெ.ஜெ.நகர் 10வது, 11வது, 12வது பிளாக் முகப்பேர் கிழக்கு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை :
அத்திப்பட்டு புதுநகர், சேப்பாக்கம், கே.ஆர்.பாளையம், தமிழ் குரஞ்சியூர், கரையன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
தாம்பரம்:
பம்மல் திரு நகர், கணமணி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், உதய மூர்த்தி தெரு, ராகவேந்திரா நகர் பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பிகேவி மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர், மங்காடு ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்தா நகர், அப்பாவு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.