- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க..!
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தண்டையார்பேட்டை:
டி.எச். சாலை, ஜி.ஏ. சாலை, சோலையப்பன் தெரு, கப்பல் போலு தெரு, சுப்புராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, பெருமாள் கோவில் தெரு, கே.ஜி.கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மப்பேடு சந்திப்பு, அன்னை தெரசா தெரு, திருமால் நகர், கஸ்பாபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மயிலாப்பூர்:
ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, வெஸ்ட் காட் ரோடு, சர்தார் ஜங் கார்டன் தெரு, மதி உசன் கான் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
power cut
போரூர்:
லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, மூர்த்தி அவென்யூ, டிரங்க் ரோடு, ராபிட் நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் ரோடு மங்காடு கணபதி நகர், லட்சுமி நகர், முத்துசாமி நகர், மீனாட்சி அம்மன் தெரு, லீலாவதி நகர் விரிவாக்கம், சிவந்தாங்கல், சுப்பையா நகர் திருமழிசை, அணைக்கட்டுசேரி, அமுதூர்மேடு, வயலாநல்லூர், சித்துக்காடு, எஸ்.ஆர்.எம்.சி சமயபுரம், மோதி நகர், தர்மராஜா நகர், கோவூர் தண்டலம், மேனகா நகர், தரப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
மூவரசம்பேட்டை, டாக்டர் ராமமூர்த்தி நகர், ரெயின்போ அவென்யூ, அருள்முருகன் நகர் நங்கநல்லூர், நேரு காலனி 10 & 15வது தெரு, இளங்கோ தெரு, பெரியார் தெரு, என்.எஸ்.கே.ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
ஜெ.ஜெ நகர் செரியன் மருத்துவமனை, கிருஷ்ணா நகர், எஸ்.எம். நாராயணா நகர், பாலு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.