- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கிண்டி:
ராமாபுரம் செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, கண்ணதாசன் நகர் நந்தம்பாக்கம், முகலிவாக்கம் மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, வேளாங்கண்ணி நகர், சுரேஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாப நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், பஜனை கோயில் தெரு, திருப்போரூர் சாலை, பல்லாவரம் கிழக்கு சாரா நகர், கவிதா பண்ணை, அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
மேனாம்பேடு ஞானமூர்த்தி நகர், விநாயகபுரம், கல்லிக்குப்பம், ரெட்ஹில்ஸ் சாலை, ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
செங்குன்றம்:
எம்.ஏ.நகர், ஆலமரம் காமராஜ் நகர், ஜிஎன்டி சாலை, காந்தி நகர், ஏழுமலை நாயக்கர் தெரு.
வியாசர்பாடி:
சிஎம்பிடிடி தட்டாங்குளம் சாலை, எம்ஆர்எச் சாலை, ஜிஎன்டி சாலை, 200 அடி சாலை, வடபெரும்பாக்கம், பொன்னியம்மன் மேடு, பிரசாந்த் மற்றும் மெரிடியன் மருத்துவமனைகள், செகரெட்ரியேட் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.