- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, தி.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆவடி:
மிட்டனமல்லி கண்டிகை, பாரதி நகர், ஐசிஎப் காலனி, பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தி.நகர்:
உஸ்மான் சாலை, பஸ்ஸுல்லா சாலை, பார்த்தசாரதி புரம், ஹபிபுல்லா சாலை, காந்தி தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, சிஆர்பி கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி :
கும்முடிப்பூண்டி ஜி.என்.டி. சாலை, மா.பொ.சி. நகர், சோலியம்பாக்கம், தம்புரெட்டி பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.