- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், எழும்பூர், ஆவடி, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
பெரும்பாக்கம் சிதலபாக்கம் வரதராஜப்பெருமாள் கோவில் தெரு, ஏ.டி.பி அவென்யூ, வெங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. காலனி, எம்.ஜி.ஆர். நகர், நூக்காம்பாளையம், விவேகானந்தா நகர், வள்ளுவர் நகர், அரசன்காலனி மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம், மல்லீஸ் அடுக்குமாடி குடியிருப்பு, கேஜி குடியிருப்புகள், நேசமணிநகர், கைலேஷ் நகர், செட்டிநாடு வில்லாஸ், ராதா நகர் ராயப்பேட்டை, செந்தில் நகர், ஓடை தெரு, குறிஞ்சி நகர், சூர்யா அவென்யூ மற்றும் அனைத்து பகுதிகளும் அடங்கும்.
எழும்பூர்:
கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, மருத்துவக் கல்லூரி பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புள்ள ரெட்டி புரம், ஓசங்குளம், நேரு பூங்கா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
சோத்துபெரும்பேடு அருமந்தை, கொடிப்பள்ளம், திருநிலை, முல்லைவாயல்.
வியாசர்பாடி:
ஆர்.கே. நகர் விஓசி நகர், திலகர் நகர், சேனி அம்மன் கோயில் தெரு, டி.எச். சாலை, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம், தாண்டவர்ய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோயில் தெரு, பாலு முதலி தெரு, ஜே.வி.கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
நங்கநல்லூர் நேரு நகர் காலனி 1 முதல் 22வது தெரு வரை, பி.வி.நகர் 1 முதல் 19வது தெரு வரை, உள்ளகரம் முழுவதும், எல்லையம்மன் கோவில் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.