- Home
- Tamil Nadu News
- சென்னை
- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை.. எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை.. எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அடையார்:
ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு, குப்பம் சோழமண்டல் கலை கிராமம், ஹரிச்சந்திரா சாலை, விஜிபி லேஅவுட், விஓசி தெரு, அம்பேத்கர் தெரு, பெத்தல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பொன்னியம்மன் கோவில் தெரு.
கிண்டி:
நங்கநல்லூர், மடிப்பாக்கம், ராம் நகர் 13வது முதல் 18வது தெருக்கள் வரை, குபேரன் நகர் 1வது முதல் 13வது தெரு, லட்சுமி நகர் மெயின் ரோடு 1வது முதல் 8வது தெரு, சிகாமணி நகர் 3வது தெரு, பெரியார் நகர் 6வது முதல் 8வது தெரு, கோவிந்தசுவாமி நகர் 8வது முதல் 11வது தெரு, ஆலையம்மன் நகர் 1வது தெரு முதல் 2வது தெரு வரை, காஞ்சி காமாட்சி நகர் 1வது முதல் 3வது தெரு வரை.
கே.கே.நகர்:
அரும்பாக்கம், என்எம் சாலை, கேனால் பேங்க் ரோடு, மேற்கு மற்றும் கிழக்கு நமச்சிவாயபுரம்
அம்பத்தூர்:
அயப்பாக்கம் பிளாட் எண் 1வது முதல் 4,500 வரை, தனகலா கேம்ப் ரோடு, அடையாலாம்பட்டு ஐஸ்வர்யா நகர், சடையப்ப வள்ளல் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோயில் தெரு
ஆவடி:
திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், எட்டியம்மன் நகர், கலைஞர் நகர், கோயில்பதாகை மெயின் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி:
சிப்காட்-IV, கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை வளாகம், தாலுகா அலுவலகம், கனிஷ்கா எஃகுஸ், அருண்ஸ்மெல்டர்ஸ், பெத்திக்குப்பம், கயிலார் மேடு, ஆரம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.