#AUSvsIND இப்ப தெரியுதா நடராஜனின் பவரு..! ஆஸி.,க்கு எதிராக மாஸ் காட்டிய தமிழ்மகன். செம குஷியில் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் முதல் விக்கெட்டை விரைவிலேயே வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் நடராஜன்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெராவில் நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கோலியின் அரைசதம்(63), ஹர்திக் பாண்டியா(76 பந்தில் 92 ரன்கள்) மற்றும் ஜடேஜாவின்(50 பந்தில் 66 ரன்கள்) அதிரடியால் ஐம்பது ஓவரில் 302 ரன்களை குவித்தது இந்திய அணி.
303 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை ஆறாவது ஓவரிலேயே வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன். முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பும்ரா மற்றும் ஷமி ஆகிய 2 ஜாம்பவான்களாலுமே ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியவில்லை. அந்த 2 போட்டிகளிலுமே ஓபனிங் பார்ட்னர்ஷிப் பெரிய ஸ்கோர். ஆனால் இந்த போட்டியில் நடராஜன், தனது 3வது ஓவரிலேயே லபுஷேனை 7 ரன்களுக்கு வெளியேற்றினார்.
ஐபிஎல்லில் அசத்தலாக ஆடியதன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன், அறிமுக போட்டியிலேயே முதல் விக்கெட்டை விரைவில் வீழ்த்தியதுடன், பும்ரா மற்றும் ஷமியால் கூட முதல் 2 போட்டிகளில் செய்யமுடியாததை செய்துகாட்டி, கேப்டன் கோலியின் அபிப்ராயத்தையும் பெற்றார்.
இதையடுத்து, முதல் 2 போட்டிகளிலும் சதமடித்த ஸ்மித்தை 7 ரன்களில் ஷர்துல் தாகூர் வீழ்த்த, ஃபின்ச்சும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸும் இணைந்து ஆடிவருகின்றனர்.