எக்குத்தப்பு அழகில் முகமது ஷமி மனைவி.. சப்புக்கொட்டும் நெட்டிசன்கள்..! பிரிவுக்கு பின் ஷமிக்கு என்ன ஆனது?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது விளையாட்டு குறித்த கலந்துரையாடலில் இருந்ததை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளில் அதிகம். அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரிடமிருந்து விலகி சென்றார் . இருப்பினும், மனைவியிடமிருந்து பிரிந்த பிறகு, ஷமியின் தொழில் வரைபடம் மேலும் உயர்ந்தது. அவர் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் . இது தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அற்புதமாக பந்து வீசினார். தற்போது, ஷமி ஐபிஎல் 2020 க்கு தயாராகி வருகிறார். அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஆவார். ஹசினிடமிருந்து பிரிந்தபின் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றார் என்பதை அறிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2020 தொடங்கிய நிலையில் அனைத்து அணிகளும் முழுமையாக தயாராக உள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாபின் பிரதான பந்து வீச்சாளர் ஷமியும் தனது அணியில் பிஸியாக உள்ளார்.
ஐ.பி.எல் மற்றும் ஷமி ஆகியோருக்கும் நீண்டகால உறவு உள்ளது. ஐபிஎல் 2012 இன் போது கொல்கத்தாவில் ஹசின் ஜஹானை சந்தித்தார். பின்னர் இருவரும் ஜூன் 2014 இல் திருமணம் செய்து கொண்டனர்.
ஹசின் மற்றும் ஷமியின் திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2018 ஆம் ஆண்டில் ஹசின் மேட்ச் பிக்சிங் , குடும்ப வன்முறை என்று பல குற்றசாட்டுகளை முன்வைத்தார்
மேட்ச் பிக்ஸிங் என்று குற்றம் சாட்டப்பட்ட பிறகும், ஷமி நம்பிக்கையினை கைவிடவில்லை, கிரிக்கெட்டில் திரும்பி வந்தார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக பந்து வீசினார். அவர் தனது மனைவியால் வைக்கப்பட்ட மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபித்தார்
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட்டு, ஷமி 2018 முதல் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் போது, ஷமி தன்னுடைய 180 டெஸ்ட் விக்கெட்களில் 70 விக்கெட்டுகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் அவர் 27 போட்டிகளில் விளையாடினார். அதே நேரத்தில், 11 டி 20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி அணியின் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார்.
ஷமியின் தொழில் வரைபடம் கடுமையாக உயர்ந்துள்ளது. உலகக் கோப்பையிலும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த முடிந்தது. இது தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியின் பந்துவீச்சில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளார்.இதற்கு முன்பு அவருக்கு அணியில் விளையாட பல முறை வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
என்ன தான் மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் தொழில் பக்தி இவரை காப்பாற்றியது என்றே சொல்லலாம்