இந்தியாவை தோற்கடிக்க இதுதான் வழி; ஆஸி.,யின் குறுக்குபுத்தி.! பிரிஸ்பேனுக்குலாம் வரமுடியாது.. இந்திய அணி அதிரடி
First Published Jan 3, 2021, 2:58 PM IST
இந்திய அணி மீது கூடுதல் அழுத்தம் போடும் விதமாக 4வது டெஸ்ட் நடக்கவுள்ள பிரிஸ்பேனில் இந்திய வீரர்களை மீண்டும் குவாரண்டினில் வைக்க முயற்சிக்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடுதல் குவாரண்டின் விதித்தால், பிரிஸ்பேனுக்கு செல்ல முடியாது என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.

சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறினார்களா என பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரித்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?