MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனிக்கு கோபம் வராதுன்னு யார் சொன்னது? கோபம் வந்து டிவியை உடைத்த ஸ்டோரி தெரியுமா? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்!

தோனிக்கு கோபம் வராதுன்னு யார் சொன்னது? கோபம் வந்து டிவியை உடைத்த ஸ்டோரி தெரியுமா? ஹர்பஜன் சிங் ஓபன் டாக்!

Harbhajan Singh's comments on Dhoni: ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டி முடிந்த பிறகு தோனி ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்காமல் டிரெஸிங் ரூமுக்கு சென்றுவிட்டார். இதையே குறிப்பிட்டு தோனி குறித்து ஹர்பஜன் சிங் அதிர்ச்சி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Oct 04 2024, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Harbhajan Singh, MS Dhoni, IPL

Harbhajan Singh, MS Dhoni, IPL

Harbhajan Singh's comments on MS Dhoni: சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் பெயர் பெற்றவர் தோனி. இந்திய அணியை அற்புதமாக வழிநடத்தி மூன்று வடிவங்களிலும் ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக அங்கீகாரம் பெற்றார். 

குறிப்பாக தோனியைப் பொறுத்தவரை, மைதானத்தில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், அமைதியாக முடிவுகளை எடுத்து, போட்டியை தங்கள் பக்கம் திருப்புவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், எப்போதும் கூலாக காட்சியளிக்கும் தோனி கடந்த ஐபிஎல் சீசனில் பொறுமையை இழந்து டிவியை உடைத்ததாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பரபரப்பு கருத்து ஒன்றை பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. கிரிக்கெட் வட்டாரங்களில் தலைப்புச் செய்தியாகவும் உருவெடுத்துள்ளது.

25
MS Dhoni and Harbhajan Singh

MS Dhoni and Harbhajan Singh

தோனி குறித்து ஹர்பஜன் சிங் என்ன சொன்னார்?

ஸ்போர்ட்ஸ் யாரிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்திய அணி, இந்திய வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் குறித்த பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். இதேன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்தும் பேசினார். எப்போதும் கூலாக இருக்கும் தோனி டிரெஸ்ஸிங் ரூம் வெளியே டிவி திரையை உடைத்ததாகவும், அதற்குப் பின்னால் உள்ள கதையைப் பற்றியும் விவரித்தார். 

இந்த சம்பவம் ஐபிஎல் 2024 தொடரின் போது நடந்தது. ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முயற்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது லீக் கட்டத்தின் கடைசிப் போட்டியில் விளையாடியது. இந்த முக்கியமான போட்டியில் சென்னை சரியாக செயல்பட முடியவில்லை. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்சிபி பந்து வீச்சாளர் யாஷ் தயால் அற்புதமாக பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல், தோனியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆர்சிபி அணி சூப்பர் வெற்றியுடன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி அணியாக வீடு திரும்பியது. 

35
MS Dhoni Loss his Cool

MS Dhoni Loss his Cool

பொறுமையை இழந்த தோனி டிவியை உடைத்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான போட்டியில் தோல்வியடைந்த பிறகு கூலாக இருக்கும் தோனி பொறுமையை இழந்ததாக ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். தோல்விக்கு பிறகு அவரது உணர்ச்சிபூர்வமான தருணங்களை விவரித்தார். அந்த போட்டியின் போது ஹர்பஜன் சிங் வர்ணனையாளராக இருந்தார். சமீபத்திய பேட்டியில், பஜ்ஜி இதைப் பற்றி பேசுகையில், தோனி தனது அமைதியை இழந்து, டிரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்று திரையில் குத்தினார் என்று கூறினார்.

"ஆர்சிபி அணி வெற்றியை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு ஆர்சிபி அணி தகுதியானது. நான் அங்கு இருந்ததால், மேலிருந்து முழு காட்சியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கைகுலுக்க தோனி மைதானத்தில் காத்திருக்கிறார். இருப்பினும், ஆர்சிபி வீரர்கள் அங்கு வர சிறிது நேரம் ஆனது. அப்போது தோனி மைதானத்தில் இருந்தவர்களிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார். பொறுமையை இழந்து டிரஸ்ஸிங் ரூம் அருகே டிவியை உடைத்தார். சில சமயங்களில் இப்படி நடக்கும். தோற்றாலும், வென்றாலும் அது விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று ஹர்பஜன் சிங் அதிர்ச்சி கருத்து தெரிவித்துள்ளார். 

45
Harbhajan Singh, IPL

Harbhajan Singh, IPL

ஐபிஎல் 2024 இல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சிஎஸ்கேவுக்கு 201 ரன்கள் தேவை. கடைசி ஓவரில் அணி தகுதி பெற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் எம்.எஸ்.தோனி களத்தில் இருந்தார். முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்து ஓவரை தொடங்கினார். எனினும், அடுத்த பந்திலேயே ஆர்சிபி பந்து வீச்சாளர் யாஷ் தயாளிடம் அவுட் ஆனார். இந்த போட்டியில் சிஎஸ்கே 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

போட்டிக்குப் பிறகு, ஏமாற்றமடைந்த தோனி தனது சிஎஸ்கே சக வீரர்களுடன் கைகுலுக்க மைதானத்தில் இருந்தார். ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தோனி அங்கிருந்து வெளியேறினார். பொதுவாக போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் வீரர்களும் தோல்வியையோ அல்லது வெற்றியையோ மறந்துவிட்டு கைகுலுக்குவார்கள். ஆனால், தோனி அப்படிச் செய்யாதது அப்போது பெரும் பேசுபொருளாகியது.

55
MS Dhoni and Virat Kohli

MS Dhoni and Virat Kohli

தோனி குறித்து ஹர்பஜன் சிங் கூறியதில் உண்மை இல்லை: சிஎஸ்கே பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக்

ஹர்பஜன் சிங் தோனி குறித்து கூறிய கருத்துக்கள் வைரலானதை அடுத்து, இதுகுறித்து அறிந்த சிஎஸ்கே பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக், இதில் உண்மை இல்லை என்று கூறினார். இதெல்லாம் ஒரு முட்டாள்தனம் என்று பஜ்ஜி மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டி அல்ல, எந்தப் போட்டிக்குப் பிறகும் எம்.எஸ்.தோனியிடமிருந்து அப்படி ஒரு செயலைப் பார்க்கவில்லை என்றும் டாமி சிம்செக் குறிப்பிட்டார். இது போலி செய்தி.. மிகவும் மோசமானது என்று கருத்து தெரிவித்தார். 

இதனிடையே, ஐபிஎல் 2024 தொடங்கும் முன், தோனி சிஎஸ்கே கேப்டன்சியில் இருந்து விலகினார். சென்னை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். 43 வயதான தோனிக்கு ஐபிஎல் 2024 சீசனில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், விளையாடிய நேரத்தில் 14 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் என 220.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் குவித்தார்.

வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அன்-கேப்ட் வீரராக அணியில் வைத்திருக்க விரும்புகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே தோனியின் தலைமையில் முன்னேறியது. தோனியின் தலைமையில் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல்
ஐபிஎல் 2025
இந்தியன் பிரீமியர் லீக்
எம். எஸ். தோனி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved