ரூ.350 கோடியில் இந்திய கிரிக்கெட் டீமுக்கு நியூ ஜெர்சி!
பிசிசிஐ இந்திய கிரிக்கெட் டீமுக்கு ரூ.350 கோடியில் புதிய ஜெர்சியை ஒப்பந்தம் செய்துள்ளது.

ரூ.350 கோடி டீல்
இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.
அடிடாஸ் ரூ.350 கோடி டீல்
கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அடிடாஸ் - இந்தியா
ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.
பிசிசிஐ
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜெண்டினா அணிக்கு அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. இதன் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று சாதனை படைத்தது. இதே லக் இந்திய அணிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீம் இந்தியா
கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக் கூற கைப்பற்றவில்லை. தற்போது அடிடாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.